ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பருத்திக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்:  விவசாயிகள் கோரிக்கை

பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அணிவகுத்து நிற்கும் பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள்.

Updated On :7 ஜூலை 2020, 12:56 pm

DIN

நன்னிலம்: பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினிகாந்த் மற்றும் ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி ஆகியோர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பருத்தி பயிர் சாகுபடி செய்திட  விதை, உரம், பாசன நீர் போன்றவற்றுக்காக விவசாயிகள் பெருமளவில் செலவழித்துள்ளனர். பருத்தி எடுக்கும் கூலியாக கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்நிலையில் பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. மத்திய அரசு குவிண்டாலுக்கு 5815 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில்,  தனியார் வியாபாரிகள் கிலோவுக்கு ரூபாய் 28 க்குத்தான் கொள்முதல் செய்கின்றனர்.
 
பருத்தியை தினசரி கொள்முதல் செய்வதற்குப் பதிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கொள்முதல் செய்யும் ஏற்பாடு உள்ளது. அத்துடன் ஏலமுறையும் பின்பற்றப்படுகிறது. இதனால் தனியார் வியாபாரிகள் மட்டுமே பயன் அடைகிறார்கள். விவசாயிகள் நேரடியாக பயன் பெற முடியாத நிலை உள்ளது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளகலிருந்து காக்காகோட்டூர் வருகின்ற விவசாயிகள் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்பதால், போக்குவரத்துத் தடையும் ஏற்படுகிறது.
 
எனவே தமிழக அரசு தலையிட்டு பருத்திக் கொள்முதலை தினசரி நடத்திட வேண்டும். ஏல முறையைக் கைவிட வேண்டும். பருத்திக்கு நெல்லைப் போன்று விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.