பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சுகாதார அமைச்சர் ஒப்புதலின்படி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், அவசர காலத்தில் மக்களின் உயிரை காக்க பயன்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மருத்துவமனை மருத்துவர் பல்வேறு கோரிக்கைகளை கருணாஸிடம் கூறினர். அதையும் தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் சரி செய்யப்படும். கிராம காவலர்கள் நியமணத்தில் எவ்வித ஊழலும் நடந்து விடாமல் இருக்கவும், அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறுவதாக கருணாஸ் தெரிவித்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி செங்கைராஜன், ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு, துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.