டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கரோனா பரவலைத் தடுக்க திருப்பரங்குன்றம் பகுதிக்குச் செல்ல தடை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 

திருப்பரங்குன்றம் கோயில்

Published On :

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 

திருப்பரங்குன்றம் பகுதியை பொருத்தவரை இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் உதவிப் பொறியாளர் முருகன் உதவி செயற்பொறியாளர் சேவியர் ஆகியோர் தலைமையில் திருப்பரங்குன்றம் நகர்ப் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில் காய்ச்சல், சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று உறுதியாகும் நிலையில் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் நகரின் நுழைவாயில் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தி நகருக்குள் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல திருநகர் பகுதி மக்களும், ஹார்விபட்டி பகுதி மக்களும் அந்த பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.