நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கரோனா பரவலைத் தடுக்க திருப்பரங்குன்றம் பகுதிக்குச் செல்ல தடை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 

News image

திருப்பரங்குன்றம் கோயில்

Updated On :8 ஜூலை 2020, 8:08 am

DIN

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகின்றது. பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 

திருப்பரங்குன்றம் பகுதியை பொருத்தவரை இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின்பேரில் உதவிப் பொறியாளர் முருகன் உதவி செயற்பொறியாளர் சேவியர் ஆகியோர் தலைமையில் திருப்பரங்குன்றம் நகர்ப் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில் காய்ச்சல், சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று உறுதியாகும் நிலையில் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் நகரின் நுழைவாயில் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தி நகருக்குள் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல திருநகர் பகுதி மக்களும், ஹார்விபட்டி பகுதி மக்களும் அந்த பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.