ஆத்தூர் அருகே அரசு மதுபானக் கடையில் சுவரைத் துளையிட்டுக் கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள அக்கிச்செட்டிப்பாளையத்தில் அரசுமதுபாணக்கடை இயங்கி வருகிறது.
அரசு மதுப்பானக் கடையில் சுவரைத் துளையிட்டுக் கொள்ளை
அரசு மதுப்பானக் கடையில் சுவரைத் துளையிட்டுக் கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள அக்கிச்செட்டிப்பாளையத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. புதன்கிழமை இரவு பணியாளர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

வியாழக்கிழமை காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு இருந்ததை பார்த்துள்ளனர்.இந்த தகவல் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் அங்கு விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் ரூ.15 ஆயிரம் மற்றும் மதுபுட்டிகள் திருடு போனது தெரியவந்துள்ளது. திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.க்கிழமை காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு இருந்ததை பார்த்துள்ளனர்.இந்த தகவல் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் அங்கு விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ரூ.15 ஆயிரம் மற்றும் மதுபுட்டிகள் திருடு போனது தெரியவந்துள்ளது. திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com