மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம் 

திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 ஜூலை 2020, 2:54 pm

DIN

திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் மானியக் கோரிக்கை தொடர்பான கோப்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் தனது அனுமதி பெறாமல் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்றும் ஆளுநர் கிரண்பேடி தடைவிதித்தார்.

இருப்பினும் ஆளுநரின் தடையை மீறி பேரவையில் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆளுநர் வராத நிலையில் ஆளுநர் உரை ஒத்திவைக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். தன்னிடம் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் செல்லாது என்றும் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு தான் பொறுப்பு அல்ல என்றும் ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடைமுறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோ அதேபோல் தான் நிகழ் நிதி ஆண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்று முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார். பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இறங்கிவந்த ஆளுநர் பட்ஜெட்டுக்கு புதன்கிழமை அனுமதி அளித்ததுடன் இன்று பேரவையில் ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய முதல்வர் நாராயணசாமி, திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜிநாமா செய்திருப்பேன்.

புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது, அதை எதிர்த்து போராடி வருகின்றேன். மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் பல துறைகளில் புதுச்சேரி அரசு விருதுகளை பெற்றுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.