மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூத்தாநல்லூர்: தொடக்க கூட்டுறவு வங்கிகளை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கக் கோரி வேலை நிறுத்தம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில்,137 கூட்டுறவு சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர். 

News image
Updated On :24 ஜூலை 2020, 12:38 pm

DIN

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில்,137 கூட்டுறவு சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர். 

இதுகுறித்து, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவருமான வி.எஸ்.வெங்கடேசன் பத்திரிகையாளர்களிடம் கூறியது, 

திருவாரூர் மாவட்டத்தில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுக்க உள்ள 137 சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளோம். இதில், 540 ஆண்கள், 180 பெண்கள் என 720 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 

கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர் 14, வேளுக்குடி 3 , புள்ளமங்கலம் 4, பழையனூர் 4, பொதக்குடி 4, பூதமங்கலம் 4, லெட்சுமாங்குடி 6, மூலங்குடி 4 மற்றும் திருராமேஸ்வரம் 3 உள்ளிட்ட 9 சங்கங்களில் பணியாற்றும் 46 பேரும் தொடர் வேலை நீறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மிரர் அக்கவுண்ட் என்ற பெயரில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதை, மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றம் செய்கிறார்கள். 
இதனால், எங்களின் வாடிக்கையாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விட்டு விலகிவிடும் நிலை ஏற்படுகிறது.

ஒரு வட்ட அளவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு, 10 கிராமத்தில் உள்ள விவசாயிகள் அங்குச் சென்று கடன் பெறுவது பெரும் சிரமத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால், வழக்கம் போலவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குப் பயிர் இன்ஸூரன்ஸ், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்கள் மற்றும் அரசின் திட்டங்களையும், குடும்ப கார்டு மூலமாக அமல்படுத்துகிறோம். இதற்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் பணம் பட்டுவாடா செய்தால், டிடிஎஸ் என்ற பெயரில் வருமான வரிப்பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உடனே ரத்து செய்து, வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 

கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கி கொடுக்கும் பணத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளின் நேரடி உறுப்பினர்களுக்கு, 6 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. அந்தத் தொகையை நேரடியாக இடையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்படாமல், நேரடியாக தொடக்க கூட்டுறவு வங்கிக்கு வழங்கினால், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வசதியாக இருக்கும். 

நீண்ட நாள் கோரிக்கையான பணி வரன் முறை செய்யப்படாத 18 ஆயிரம் பணியாளர்களுக்கு, உடனே பணி வரன் முறை செய்யப்பட வேண்டும். அங்காடி ஊழியர்களுக்கு 5 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சம்பளம் செட்டில்மெண்ட் செய்யப்படாமல் உள்ளது. அவைகளை உடனே வழங்கப்பட வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை, மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்காடிப் பணியாளர்களைத் தவிர மற்ற அனைவரும் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.