அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கக் கோரி எம்.பி ராமலிங்கத்திடம் மனு

சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கத்திடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.

News image
மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட எம்.பி.ராமலிங்கத்திடம் தன்னார்வலர்கள் மனு
Updated On :24 ஜூலை 2020, 12:30 pm

DIN

சீர்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கத்திடம் மனு அளித்த அனைத்து  தன்னார்வ  அமைப்பினர்  சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை புதிய மாவட்டத்தின் எல்லை வரையறை பணிகள் சிறப்பு அதிகாரி லலிதா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய மாவட்டத்தில் அமைய உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரியில் ஏதேனும் ஒன்றை சீர்காழியில் அமைக்கவேண்டும், சீர்காழியில் வருவாய் கோட்டம் பிரித்து கோட்டாசியர் அலுவலகம் அமைத்திடவேண்டும், கொள்ளிடம் தனி தாலுக்கா உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தன்னார்வ அமைப்பினர், வர்த்தகர்கள், விவசாயிகள், கட்சியினர் ஒன்றிணைந்த சீர்காழி கோட்டம் உருவாக்கம் அமைப்புக்குழு அமைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி எம்.எல்.ஏ பி.வி.பாரதியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.இதனிடையே சீர்காழிக்கு வருகைதந்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்தினை ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட எம்பி.ராமலிங்கம்,  சீர்காழியில்  மாவட்ட தலைமை மருத்துவமனை,சீர்காழி கோட்டம் உள்ளிட்ட கோரிக்கையை சிறப்பு அதிகாரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என உறுதியளித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சீர்காழி ஒன்றியக்குழுத்தலைவரிடம்  அமைப்புக்குழுவினர், இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 79 பஞ்சாயத்துக்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நிர்வாகிகள், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.