மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எதிர்க்கட்சியினர் முகக்கவசம் அணியாததால் பேரவையை நடத்த முடியவில்லை: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாமல் போனது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி
Updated On :27 ஜூலை 2020, 9:47 am

DIN

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாமல் போனது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடைபெற்றது.

இது குறித்து தனது முகநூலில் காணொளி மூலம் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது.  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் கரோனா தொற்று ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசின் விதிமுறைபடி 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 15,000 பேருக்கு கரோனா சோதனை செய்ய வேண்டும் .  ஆனால், புதுவையில் 14 லட்சம் மக்கள்தொகை இருக்கும் நிலையில்,  ஏற்கெனவே 35,000 பேருக்கு மேல் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைவிட புதுவையில் இரு மடங்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  புதுச்சேரி இந்திரா காந்தி  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை எண்ணிக்கையை 400 இல் இருந்து 1,000 ஆகவும்,  ஜிப்மரில் 1000 இல் இருந்து கூடுதலாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் தலா 150 முதல் 300 பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  புதுவையிலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே, புதுவையில் சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் தேவைப்படுகிறது.  மாநில அரசு சார்பில் ஜிப்மர்,  அரசு மற்றும் தனியார்  மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சில ஹோட்டல்களில் கூட தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான உபகரணங்களை வாங்க தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது.  மாஹே,  காரைக்காலில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆந்திராவில் கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அதன் எதிரொலியாக ஏனாம்  பிராந்தியத்திலும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கரோனா வந்ததால் பேரவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், மரத்தடியில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தான் பேரவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி கூட முகக்கவசம் அணியாமல் தான் பேரவைக்கு வந்தார்.  முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினேன். கரோனா பாதிப்புடன் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளே விதிமுறைகளை கடைபிடிக்காததால் பல பிரச்சனைகள் வருகின்றன.  கடைகள்,  சந்தைகள்,  திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்கு வருவோர்களால் கரோனா பரவுகிறது.

 கரோனாவுக்கு மருந்து இல்லை.  இப்போது தான் சோதனையில் இருந்து வருகிறது.  எனவே,  விதிமுறைகளை கடைபிடித்தால் தான் கரோனா பரவலை தடுக்க முடியும்.” என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.