மத்திய அரசு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி - அதில் தமிழ்நாட்டிலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு வழங்க அளித்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்றுவது குறித்த வரைமுறைகள் வகுக்க வேண்டும் என்று தெளிவுபட தீர்ப்பளித்துள்ளதையும், “மத்திய அரசையோ, இந்திய மருத்துவக் கழக்தையோ, ஏதோ தேர்தல் அறிக்கையில் சொன்னது குறித்து முடிவு எடுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. மத்திய அரசு இந்த நீதிமன்றம் முன்பும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் முன்பும் பிரமாண வாக்குமூலத்தில் உறுதியாக ஒப்புக்கொண்ட இடஒதுக்கீடு பற்றித்தான் முடிவு எடுக்கச் சொல்கிறோம்” - என்று பொருள் பொதிந்த - பொன்னான வரிகளை மத்திய பா.ஜ.க. அரசு மனதில் நிறுத்தி - உடனடியாகக் கூட்டத்தைக் கூட்டி மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வி ஆகியவற்றில் இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரை அழைத்துப் பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றமே கூறியிருப்பதால் - மத்திய அரசின் அழைப்பிற்காகக் காத்திராமல் - தனது கூட்டணிக் கட்சியாக இருக்கும் பா.ஜ.க.,வின் பிரதமருக்கு உடனடியாக முதல்வர் அழுத்தம் கொடுத்து இந்தக் கல்வியாண்டிலேயே இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.