பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இவ்வளவுதான் மரியாதை! புதுச்சேரியில் கரோனாவால் பலியானவர் உடலை சவக்குழியில் வீசிய அவலம்

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மரியாதையின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் கவிழ்த்துவிட்டுச் செல்லும் அவலம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:15 pm IST

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மரியாதையின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் கவிழ்த்துவிட்டுச் செல்லும் அவலம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த 44 வயதான ஒருவர், புதுச்சேரி மூலக்குளம் அருகே கோபாலன்கடை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு வந்திருக்கிறார்.

திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, உறவினா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபா் குறித்த தகவல்கள் அரசின் அறிவுறுத்தல்படி, நகராட்சி, காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினா், இறந்த நபரை அடக்கம் செய்ய ஊசுடு தொகுதிக்கு உள்பட்ட கோபாலன்கடை மயானத்துக்கு கொண்டு சென்றனா். 

இதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு, எதிா்ப்புத் தெரிவித்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதையடுத்து, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம், வட்டாட்சியா் அருண் அய்யாவு ஆகியோா் முன்னிலையில், இறந்த நபரை உள்ளாட்சித் துறை ஊழியா்கள் அடக்கம் செய்தனா்.

முன்னதாக தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த சவக்குழி அருகே சென்ற சுகாதாரப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் இருந்து உடலைக் கவிழ்த்துவிட, இறந்தவரின் சடலம் உருண்டபடி சவக்குழிக்குள் விழுந்திருக்கிறது.

சவக்குழிக்குள் சடலத்தைத் தள்ளிவிடும் விடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வெகு தீவிரமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.