இந்நிலையில் புதன்கிழமை கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஐயப்பன், சுகாதார ஆய்வாளர் பினேஷ் மற்றும் காவல்துறை கண்ணன்விளை கிராமத்தைச் சுற்றி 4 தடுப்பு வேலி அமைத்து 107 வீடுகளைத் தனிமைப்படுத்தினார். மேலும், தொற்று உள்ளவர்களிடம் நேரடி தொடர்பில் உள்ள 20 பேரிடமிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த பேலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.