காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை

வேலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2020, 12:07 pm

DIN

வேலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி (70) இவருக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் பெரியவன் முனிராஜ்(50) சின்னம்மா (40) மற்றும் சூரியகலா (38)உள்ள நிலையில் சின்னம்மாளுக்கு சற்று  உடல்நல  குறைபாடு உள்ளதால் திருமணமாகாத நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். முனிராஜ் அதே பகுதியில் தனியாக தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். இன்னொரு மகளான சூர்யகலா அதே பகுதியில் திருமணம் செய்து வைத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே முனிராஜ்  தனது தாய் இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று இரவு மீண்டும் தனது தாயான இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் தாய் இந்திராணி சொத்தை மகள்களுக்கும் சேர்த்து பிரித்து தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த முனிராஜ் தனது தாய் இந்திராணியை கல்லால் பலமாக தாக்கியுள்ளார். அதை தடுக்கச் சென்ற தங்கை சின்னம்மாவையும் தாக்கியுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய் இந்திராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்திராணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும், இது குறித்து பரதராமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் சின்னம்மாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலை செய்த முனிராஜ் கைது செய்து மேலும் முனிராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.