ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் சார்பு ஆய்வாளர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்துடன் லாரி மோதிய விபத்தில் காவல் சார்பு ஆய்வாளர் சம்பவ இடத்திலே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :11 ஜூன் 2020, 4:30 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்துடன் லாரி மோதிய விபத்தில் காவல் சார்பு ஆய்வாளர் சம்பவ இடத்திலே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம் புத்தூரைச்சேர்ந்தவர் சாலமன்வேத மணி இவர் சுரண்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பிரதீஸ் சார்பு ஆய்வாளராக காவல் துறையில் 2016 ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் ரோவிங் யூனிட்டில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நான்கு நாட்கள் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

வியாழக்கிழமையன்று தனது ஊரிலிருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் நத்தம்பட்டி அருகே தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி கிராவல் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்தபோது நேருக்கு நேர் மோதியதில் சார்பு ஆய்வாளர் பிரதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக சேர்த்தனர்.

பின்னர் டிப்பர் லாரி டிரைவர் ஞானகுருவை கைது செய்து நத்தம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தார் சார்பு ஆய்வாளர் பிரதீஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.