சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மைலம்பட்டியில் பொதுப்பணித்துறை, நீர் நில வளத்திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சரபங்கா நதி குறுக்கே தடுப்பணை செப்பனிடப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருவதையடுத்து, டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்களுக்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் சார்பில் நீர்நலவளத்திட்டத்தின் கீழ் சரபங்கா நதியின் குறுக்கே மைலம்பட்டி பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பணைகளை செப்பனிடுவதன் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வீணாகாமல் பயன்பாட்டிற்கு செல்ல உள்ளன.
மேலும், பொதுப்பணித்துறையின் சார்பில் மேட்டூர் அணைக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்கள், சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டடுள்ள தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகள் தூர்வாருதல், செப்பனிடுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் நிறைவுற்றவுடன் வழக்கம்போல் ஆடி மாதம் மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்குக்கரை வாய்க்கால்களில் அரசு தண்ணீர் திறந்து விட்டால் நிகழாண்டிற்கும் கடந்த ஆண்டைப் போல் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



