தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் கோம்பை, சிந்தலைச்சேரி, எம்.சுப்புலாபுரம், கடமலைக்குண்டு உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கரோனா பிரிவில் தனியாக மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர் கூறும் போது,
கரோனா தொற்று பரவலுக்காக மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பிரிவு தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்றார்.