திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் காவலர்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

News image

சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்

Updated On :24 ஜூன் 2020, 12:10 pm

ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கரோனா பரவல் துவங்கிய நேரத்தில் தடுப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட  காவல்துறையினருக்கு சூரியம்பாளையம் பகுதி கழக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. 42 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பொருள்களை பகுதி கழக செயலாளர் பழனிசாமி, நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மேகஸ்வரன், நெசவாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் குமரேசன், கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவர் கணேஷ்குமார், ஜாேதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.