அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பெண்களை ஏமாற்றிய விவகாரம்: காசியின் தந்தை கைது 

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

News image
Updated On :30 ஜூன் 2020, 6:11 pm IST

நாகர்கோவில்: குமரியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி (26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களை தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி அவர்களோடு தனியாக இருக்கும் படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பெண்களும் ஒரு இளைஞரும் அளித்த புகாரின் பேரில் ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் வழக்குகள் ஒரு கந்து வட்டி வழக்கு என 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இதற்கிடையே  காசியின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.