தமிழகத்தில் வீடு தேடி வந்து உணவுப் பொருளைக் கொடுத்த அங்கன்வாடி ஊழியர்கள்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் கல்வி மையங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வீடு தேடி வந்து உணவுப் பொருளைக் கொடுத்த அங்கன்வாடி ஊழியர்கள்
Updated on
1 min read


கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் கல்வி மையங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு அளிக்க வேண்டிய சமைக்கப்படாத உணவுப் பொருட்களை ஊழியர்கள் வீடு தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.

அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை குழந்தைகளின் தாயாரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று அளித்தனர்.

மேலும், குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களை முறையாக சமைத்து நேரத்துக்கு உணவளிக்குமாறு பெற்றோருக்கு அங்கன்வாடி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com