டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா: வெறிச்சோடிய திருமலை

திருமலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் லட்சகணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருமலை ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி போயுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2020, 7:27 am

DIN

திருமலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தினமும் லட்சகணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருமலை ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி போயுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிரிக்கும் என்றும் எண்ணப்படுகிறது. இதுவரை 195 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருமலைக்கு வந்த பக்தர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவஸ்தான அதிகாரிகள் ஒருவாரம் திருமலைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. 
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குள் திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு கோயில் மூடப்பட்டது. 

தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் மட்டும் ஆகம விதிப்படி எவ்வித குறைவும் இல்லாமல் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் தினசரி ஜேஜே என்று பக்தர்கள் கூட்டத்தால் சூழ்ந்திருக்கும் திருமலை வெள்ளிக்கிழமை முதல் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. திருமலைக்கு செல்லும் மலைபாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட நடைபாதை மார்கங்களும் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.