பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சேக் (எ) ஜெயக்குமார்(25). அதே பகுதியைச் சேர்ந்த 6 நண்பர்கள் நேற்று பிற்பகல் பரமக்குடி பொன்னையாபுரம் அரசு கல்லூரி அருகேயுள்ள கண்மாய் கரையில் நின்று குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர்.
அதுசமயம் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆனந்த் ஆத்திரம் அடைந்த பொன்னையாபுரத்தைச் சேர்ந்த அழகர் மகன் ஆனந்த், ஜெயக்குமாரின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் அறிந்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் எமனேசுவரம் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபர் ஆனந்த்(26 ) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தொடர்ந்து எமனேசுவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண் அடைந்த ஆனந்தை கைது செய்து, தலைமறைவான மேலும், தலைமறைவான 5 பேர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த ஜெயக்குமார் மற்றும் சரண் அடைந்த ஆனந்த் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


