மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குற்றாலத்தில் குளிப்பதற்கான தடை தொடரும்: மாவட்ட ஆட்சியர்

பொது முடக்கம் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News image
Updated On :20 மே 2020, 12:50 pm

DIN

கடையநல்லூர்: பொது முடக்கம் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெரியகுளம் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர் அருண் சுந்தர்தயாளன் செய்தியாளர்களிடம் கூறியது, பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலில் உள்ளது. அதுபோல் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும்.

தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பில் 35 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். வட்டாட்சியர் அழகப்பராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்பொழுது தண்ணீர் கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.