/

தமிழகத்தில் புதிதாக 2,481 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 2,481 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 நவம்பர் 2020, 1:23 pm


தமிழகத்தில் புதிதாக 2,481 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 671 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 31 பேர் பலியானதாக இன்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,183 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 3,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,98,820 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 19,504 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 70,297 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.