வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பட்டாசு வெடிப்பதற்கு தடை வேண்டாம்: ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

News image
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :7 நவம்பர் 2020, 10:45 am

DIN

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கக்கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கரோனா தொற்று பரவலின் மத்தியில் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஒடிசா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “காற்று, ஒலி மாசு விதிகளின்படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவிகிதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் உள்ளிட்ட 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இதன்காரணமாக பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழக முதல்வர் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.