மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்

முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான  க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.

News image
க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்
Updated On :17 நவம்பர் 2020, 7:05 am

DIN


முன்னணித் தமிழ்ப் பதிப்பாளரும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார்.

பதிப்புலக ஆளுமை என்று கூறப்படும் க்ரியா ராமகிருஷ்ணன், கரோனா பாதித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல புத்தகங்களை வெளிக்கொணர்ந்தவர். புத்தகப் பதிப்புத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

ந. முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது. மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையையும் க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கியவர்.

க்ரியா ராமகிருஷ்ணனின் முயற்சியால் பிரெஞ்ச்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் தமிழில் வந்தன. நவீன தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்பாக க்ரியா வெளியிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்கள் அமைந்துள்ளன.

ஆல்பர் காம்யுவின் 'அந்நியன்', முதல் மனிதன்,  சார்த்தரின் ' மீள முடியுமா?', ழாக் ப்ரவரின் 'சொற்கள்', ஜோஷ் வண்டேலூவின் அபாயம் என எண்ணற்ற படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குப் புத்துணர்வூட்டின.

ஐராவதம் மகாதேவன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களைக் க்ரியா வாயிலாக வெளியிட்டிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.