டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,392 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,392 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

News image
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,392 கன அடியாக உயர்வு
Updated On :17 நவம்பர் 2020, 3:41 am

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,392 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

மழையின் காரணமாக நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,770 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 10,392 கன அடியாக அதிகரித்துள்ளது. 

நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 94.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 94.83 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 58.34டி எம் சி யாக உள்ளது. 

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.