தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்காக திறக்கப்பட்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.