இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் 5-ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலை தான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பின்னரும் அரசு பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.