சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவு!

நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

News image
Updated On :24 நவம்பர் 2020, 3:57 pm

DIN


நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளன. வேளச்சேரி பகுதிகளில் முழங்கால் வரை நீர் தேங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கவிருப்பதால், இதன் தீவிரத் தன்மை நாளையே உணரப்படும் என வானிலை ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. இதனால், நாளை மழையின் தீவிரம் மேலும் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.