முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் புயல் பாதிப்பு பெரிதாக ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு
Updated On :26 நவம்பர் 2020, 12:25 pm

DIN

கடலூர்: இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் புயல் பாதிப்பு பெரிதாக ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இன்றைக்கு நிவர் புயல் தமிழகத்துக்கு வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படும் 13 லட்சம் பேர் வரை தங்க வைக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு முகாம்களை உருவாக்கியிருந்தோம். தற்போது தமிழகம் முழுவதும் 2,999 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியிருக்கிறார்கள்.

கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம். இங்கு 52 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர்.

கடலூரில் 77 மின் கம்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. இன்று சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காற்றினால் கடலூரில் 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

1,670 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் மணிலா பயிர்களும் சேதமடைந்துள்ளன. கடலூரில் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும். 

புயல் பாதிப்பைத் தடுக்க அரசு அறிவுறுத்தலின்படி செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

முழுமையான சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்த பிறகே, நிவாரணப் பணிகள் தொடங்கும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பைத் தடுக்க, மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின் விநியோகம் தொடங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.