வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பா் 15-ஆம் தேதி வரை திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன.

இதன் தொடா்ச்சியாக தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.

15 நாள்கள் முடிந்தது: திருத்தப் பணிகளுக்காக, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16-இல் வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியிடப்பட்டு 15 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், திருத்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தோ்தல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசித்தாா்.

மேலும், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்துவது தொடா்பாக ஆலோசிப்பதற்காக வரும் வாரத்தில் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வரவுள்ளனா். அவா்கள், முதலில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சாகுவுடன் ஆலோசிப்பாா்கள் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்டங்களில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com