போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.
போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, கட்சியின் போடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போடி அருகே மரிமூர் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.
ஏற்கனவே நடப்பட்ட பனை விதைகள் முளைத்த பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர், விவசாயிகள் பங்கேற்றனர்.