மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசி அருகே ரூ. 50 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே உரிமம் பெறாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2020, 1:01 pm

DIN

சிவகாசி அருகே உரிமம் பெறாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சிவகாசி சாத்தூர் சாலையில் அனுப்பங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுமதி பெறாத கட்டடம் ஒன்றில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் தீப்பெட்டி பட்டாசு தனி வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்களுடன் வருவாய் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில் தர்மராஜ் என்பவர், வயது 65 விஷ்ணு டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் லாரி சீட்டு நடத்தி வருவதும் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு பட்டாசு பண்டங்களை அனுப்பி வைப்பதற்காக உருவமில்லாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. ஒரு கிட்டங்கியில் பட்டாசு சேமித்து வைக்க வேண்டுமெனில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு தர்மராஜ் எவ்வித அனுமதியும் பெறாததால் அந்த கிட்டங்கியில் இருந்த சுமார் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து அந்த கிட்டங்கி சீல் வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.