பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலி

விழுப்புரம் மாவட்டம் ‌செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

News image
சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலி
Updated On :23 அக்டோபர் 2020, 6:56 am

DIN

விழுப்புரம் மாவட்டம் ‌செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி  மகன் கதிரவன்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில்,அந்த கிராமத்தில் உள்ள ராஜ்(40) என்பது தனது கூரை வீட்டை இன்று காலை பிரித்து கட்டினார். அந்த பணியில் கதிரவன் ஈடுபட்டார். அப்போது திடீரென கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கதிரவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.