எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாமக்கல்லில் சிலம்பொலி சு. செல்லப்பனார் மணிமண்டபம்: பூமிபூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை  இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News image

பூமிபூஜை விழாவில் பங்கேற்ற பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் திமுக பிரமுகர்கள்.

Updated On :27 அக்டோபர் 2020, 10:23 am IST

நாமக்கல்:  மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை  இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பொலி சு. செல்லப்பன். கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி காலமானார். 

அவரது நினைவாக  ஏழு அடி  உயரம் கொண்ட முழு வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் தமிழாஆய்வு மையம் ஆகியவை  கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டி மேடு சிலம்பொலி நகரில் இன்று காலை 7.45 மணி அளவில் நடைபெற்றது. 

சிலை அமைப்புக் குழு உறுப்பினர் பூங்கோதை செல்லத்துரை தானமாக  வழங்கிய இடத்தில்  மணிமண்டபம் அமைகிறது. தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் திருவுருவ வெண்கலச் சிலை 7 அடி உயரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், அவருடைய நினைவு மணிமண்டபம் ரூ.20 லட்சம் மதிப்பிலும்,  தமிழ் ஆய்வு மையம் ரூ.20 லட்சம் மதிப்பிலும் என  மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. தமிழாய்வு மையத்தில் சிலம்பொலியார் பயன்படுத்திய மற்றும்  அவர் எழுதிய புத்தகங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. 

இந்த தமிழாய்வு மையத்தை வெளிநாடு, உள்நாட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. பூமிபூஜை விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பூங்கோதை செல்லத்துரை, சிலம்பொலியார் மகன் கொங்குவேள் மற்றும் குடும்பத்தினர்,  தமிழறிஞர்கள், பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சிவியாம்பாளையம் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை  தமிழறிஞர் சிலம்பொலி. சு. செல்லப்பனார் முழு உருவ சிலை, மணிமண்டபம், தமிழாய்வு மையம் கட்டட அமைப்பு குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.