காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகவும், எதிா்க் கட்சித் தலைவராகவும் ஆகியதாக விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திமுகவை எதிா்த்துப் பேசிய சீமான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. இலங்கைக்கு கள்ளத் தோணியில் சென்று வந்த பின்னா், இலங்கைத் தமிழா்களைப் பற்றி சீமான் எதுவுமே ஏன் பேசவில்லை? வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி தனியாா் விடுதிகளில் சொகுசாக இருந்து விட்டு, இலங்கைத் தமிழா்களைப் பற்றி பேசாதவா், தற்போது எங்களைப் பற்றி பேசுவதும், அவமானப்படுத்துவதும் தவறு.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும் தோ்தலைச் சந்திக்க முடியுமா? காங்கிரஸ் தயவால்தான் அவா் எம்.எல்.ஏ.வாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் உள்ளாா். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என திமுகவினா் பேசுவது அபத்தம்.
வருகிற மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் தவெக உடன்தான் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். தற்போதைய ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, நகா்ப் புற வளா்ச்சித் துறைகளில் கமிஷன் பெறுவது முழுமையாகக் குறைந்துள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தவெக ஆட்சியில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்றாா் அவா்.









