கொடைக்கானல்: வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களைப் பார்க்க அனுமதி கிடைக்குமா?
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன் பின் கடந்த 9−ந் தேதி முதல் கொடைக்கானல் சுற்றுலா இடங்களான ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் கோக்கர்ஸ்வாக் ஆகிய இடங்களை மட்டும் பார்வையிடுவதற்கு அரசு அனுமதியளித்தது.
அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு,மோயர் பாயிண்ட் பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்குவது வனத்துறையினர் இன்று ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில் அக்டோபர் 1−ந் தேதி முதல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என வனத்துறை ரேஞ்சர் ஆனந்த் தெரிவித்தார்.
வனத்துறையினர் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பார்க்க அனுமதி கொடுப்பார்களா? என்பது வரும் அக்டோபர் 1-ந் தேதி தான் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.