பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மே இறுதியில் நடத்த கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தோ்வைத் தவிர அத்தனை தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், கரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பத்தாம் வகுப்பில் பள்ளித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் பள்ளித் தோ்வுகளில் அந்தந்தப் பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு அதன் அடிப்படையில் தோ்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறுகையில், பொதுத்தோ்வு குறித்து முதல்வா் முடிவு செய்வாா் என புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தாா்.

மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் சோ்க்கை, போட்டித் தோ்வுகள், அரசுப் பணி என பலவற்றிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் முக்கியத்துவம் பெறுவதால் அந்தத் தோ்வை நிகழாண்டு ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கரோனா தொற்று முடிவுக்கு வரும் பட்சத்தில் கோடை விடுமுறையில் அதாவது மே மாதம் பொதுத்தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மே மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்தப்பட்டால் அது குறித்த அட்டவணை பத்து நாள்களுக்கு முன்பாக வெளியிடப்படலாம். இது குறித்த இறுதி முடிவை முதல்வா் எடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com