சென்னையில் கரோனா நிலவரம்: அம்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா தொற்று அகிகரித்து வருகிறது.
சென்னையில் கரோனா நிலவரம்: அம்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று
சென்னையில் கரோனா நிலவரம்: அம்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா தொற்று அகிகரித்து வருகிறது. மொத்த கரோனா நோயாளிகளில் அம்பத்தூரில் மட்டும் 21% நோயாளிகள் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் 13,064 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1970 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைந்தபட்சமாக மணலியில் 198 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 21% நோயாளிகளும், தண்டையார்பேட்டை 6%, ராயபுரத்தில் 8% ஆகவும் உள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை 1,138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 95,857- ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், அண்மையில் 90 ஆயிரமாகவும் உயா்ந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை 1,138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,857-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 80,761 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,064 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் திங்கள்கிழமை 21 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 2,032- ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com