தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்

தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறொரு மாவட்டத்துக்குச் செல்ல இ- பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறொரு மாவட்டத்துக்குச் செல்ல இ- பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதில், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை  மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ பாஸ் பெற வேண்டும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதைய நடைமுறையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com