நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்


சென்னை: மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இன்று வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாநில அளவில் மற்றும் அரசுப் பள்ளியில் படித்து 7.5% ஒதுக்கீட்டு இடங்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் படிக்க 405 அரசு பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com