/

திருச்சியில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 9.68 கோடியில் சைக்கிள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர். 

News image

திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி.

Updated On :2 ஜனவரி 2021, 12:38 pm IST



திருச்சி: திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர். 

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி, திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். 

திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடங்கும். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 587 மாணவர் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 9 கோடியே 68 லட்சம் ஆகும். 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.