/

பெருமாநல்லூர் அருகே 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூர் வடக்கு பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார்  வழங்கினார்.

News image

பெருமாநல்லூர் அருகே 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

Updated On :7 ஜனவரி 2021, 4:57 pm IST


அவிநாசி: பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூர் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வியாழக்கிழமை மாலை வழங்கினார்.

திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன் காலனியில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இலவச வீட்டுமனைப் பட்டா 36 பயனாளிகளுக்கு சட்டப்பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கீதா சந்திரசேகர், ஜஸ்வர்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், பொறுப்பாளர்கள் சௌந்தர்ராஜன், மேக்னம் பழனிசாமி, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.