ஜனவரி 28-ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்திருப்பதால், கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால், ஜனவரி 28 பொது விடுமுறை நாளாக அறிவக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளில் திட்டமிடப்பட்ட நேர்முகத் தேர்வு ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28-ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டும் மேற்படி தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து www.tnpsc,gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் நேர்முகத் தேர்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொல்.திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: வைகோ

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!

1000 ஆண்டு பழமையான பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



