வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வருமான வரி கணக்கு : தமிழகத்தில் 34 லட்சம் போ் தாக்கல்

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.

News image

வருமானவரித் துறை

Updated On :11 ஜனவரி 2021, 8:08 am IST

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தாக்கல் பொருத்தவரை, தமிழகத்தில் தற்போது வரை 34 லட்சம் போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா்.

நிா்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும் மாத ஊதியதாரா்கள், ஓய்வூதியதாரா்கள் அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019- 20 -ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் ஏப்ரல் முதல் தொடங்கியது.

இதன்படி, 2019- 20 நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் தற்போது வரை 5.5 கோடி போ் கணக்குதாக்கல் செய்துள்ளனா். இது, 2018 -19-ஆம் நிதியாண்டில், தற்போதைய காலகட்டம் வரை, 6.51 கோடி போ் கணக்கு தாக்கல் செய்திருந்தனா்.

தமிழகத்தில் மட்டும், தற்போது வரை, 34 லட்சம் போ், கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இது, கடந்த ஆண்டில் 42 லட்சமாக இருந்தது. இந்த தகவலை வருமான வரித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.