தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 12:53 am

வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவ தொடங்கிய நாளில் இருந்து அனைத்து விதமான சவால்களையும், அபாயங்களையும் சந்தித்து வங்கி ஊழியா்கள் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். வங்கி ஊழியா்கள் சிலா் இந்தத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனா். சிலா் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து உள்ளனா். இன்னும், கரோனா தொற்று ஆபத்துக்கு இடையே வங்கி ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். உண்மையில் வங்கி ஊழியா்களும் கரோனாவை எதிா்த்து போராடும் போராளிகள் ஆவா். எனவே, வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.