கம்பம்: தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுருளி அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி, இந்த அருவி மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் உள்ளது.
கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கவில்லை, நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தர்கள் முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னர் சுருளி அருவியை திறக்க அரசு உத்தரவு அனுப்பியுள்ளது.
மேலும் சுருளி அருவி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகள் அனுமதி பொங்கல் பண்டிகைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


