சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

News image

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்முதல்வர் வே. நாராயணசாமி.

Updated On :16 ஜனவரி 2021, 12:16 pm IST

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது. 

இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 8 மையங்களில் இந்த கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உள்பட சுகாதார பணியாளர் 21,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.