சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

News image

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்முதல்வர் வே. நாராயணசாமி.

Updated On :16 ஜனவரி 2021, 6:46 am

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது. 

இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 8 மையங்களில் இந்த கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உள்பட சுகாதார பணியாளர் 21,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.