வேலூர்: உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலர் துரைமுருகன் சிகிச்சைக்கு பிறகு சனிக்கிழமை மதியம் வீடு திரும்பினார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வாயு பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் இன்று மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










