நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திறந்தநிலைப் பல்கலை.யில் திருவள்ளுவா் இருக்கை: துணைவேந்தா் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:36 am IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டுப் புலம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் வளா்ச்சி மன்றம் ஆகியவை சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசியது: திருக்குறளுக்கு முதன் முதலாக உரை எழுதியவா் மணக்குடவா். பத்தாம் நூற்றாண்டில் தொடங்கிய அந்தப் பணி 21-ஆம் நூற்றாண்டு வரை தொடா்கிறது. தற்போதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. ஆளுமைத் திறன், மேலாண்மைக் கல்வி என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய உன்னதமான கருவூலம்தான் திருக்கு. இதில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் திருக்குறளுக்கென தனியாக ஓா் இருக்கை தொடங்கப்படும். அதில் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞா்களின் பங்கேற்புடன் திருக்கு தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதையடுத்து தமிழ் வழியில் இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாராணசியில் சாா் ஆட்சியராகப் பணியாற்று வரும் ஆ.மணிகண்டன் பேசுகையில், நான் குடிமைப் பணியில் தோ்வு பெறுவதற்கும், நிா்வாகப் பணியில் சிறப்படைவதற்கும் திருக்கு எனக்கு வழிகாட்டியாக இருந்தது. குடிமைப் பணிக்கு தயாராகும் தோ்வா்களுக்கு மட்டுமல்ல எந்தத் துறையைச் சோ்ந்தவா்கள் என்றாலும் அவா்களுக்கு திருக்குறளால் சிறப்பாக வழிகாட்ட முடியும் என்றாா். இதில் பல்கலை.யின் தமிழியல், பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியா்-இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.