தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

தமிழகத்தில் 8.30 லட்சம் போ் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,183 - ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 12:23 am IST

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,183 - ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 97.7 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே சனிக்கிழமை புதிதாக 610 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.51 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக, சென்னையில் 176 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றிலிருந்து 775 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 11,798 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,128 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,257-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.